வால்பாறையில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி, சிறுத்தை தாக்கி உயிரிழந்ததை அடுத்து, 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டம் பகுதியில், வடமாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தேயிலைத் தோட்ட பகுதியில் வனத்துறை சார்பில் 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை வன அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், தேயிலை தோட்டத்தில் உள்ள புதர்களை அகற்ற எஸ்டேட் நிர்வாகத்திற்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.