நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கியது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கியது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து திருச்செந்தூர் கோயிலைவிட்டு வெளியே வந்த நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாண்டியராஜன் ஆகியோரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.