தீபாவளி பண்டிகை - தமிழகம் முழுவதும் 14,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை – தமிழகம் முழுவதும் 14,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28 முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 2,910 பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது

தீபாவளி பண்டிகை நிறைவடைந்த பின்னர் நவம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் மொத்தமாக 12, 606 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

பயணிகளின் வசதிக்காக 24*7 செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044 – 24749002, 044 – 26280445, என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்  என்றும் சிவசங்கர் கூறினார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், போதுமான பேருந்துகள் இயக்கப்படும், தேவைப்படும் பட்சத்தில் தனியார் பேருந்துகளை வாடகை எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தனியார் பேருந்துகள் அவரவர் ஓட்டுநர்களின் மூலமாகவே இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் நன்மைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்ல வேண்டாம். திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் சாலை வழியாக செல்ல வேண்டும் என சிவசங்கர்  அறிவுறுத்தினார்.

 

Tags: Chennaideepavaliminister sivasankarspecial buses
Share
Tweet
SendShare
Previous Post

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் – திருச்செந்தூரில் தொடங்கியது படப்பிடிப்பு!

Next Post

உதயநிதி ஸ்டாலினை தெரியும்? மெரினா அருகே போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies