காஞ்சிபுரத்தில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே கிழக்கு ராஜ வீதியில் நகரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.