காவல்துறையினரின் தளராத அர்ப்பணிப்பு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “இன்று, காவல்துறை நினைவு தினத்தில், நமது காவலர்களின் துணிச்சலுக்கும், தியாகத்திற்கும் மரியாதை செலுத்துகிறோம்.
அவர்களின் தளராத அர்ப்பணிப்பு நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவர்கள் தைரியத்தையும் உறுதியையும் எடுத்துக்காட்டுகிறார்கள். மனிதாபிமான சவால்களின் போது அவர்களின் முன்முயற்சியும் உதவியும் சமமாக பாராட்டத்தக்கவை என மோடி தெரிவித்துள்ளார்.