சென்னையில் தொழிலதிபரிடம் ஆன்லைன் மூலமாக 14 கோடி ரூபாய் பணம் மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் குற்றப் பிரிவு போலிசார் கைது செய்தனர்
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, சுப்ரமணியன் உள்ளிட்ட 6 பேர், வாட்ஸ் அப் குழு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சைபர் கிரைம் குற்றபிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பண மோசடியில் ஈடுபட்ட சுப்ரமணியன், மணிகண்டன், சரவண பிரியன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.