சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் - ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி!
Aug 24, 2025, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி!

Web Desk by Web Desk
Oct 22, 2024, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காரில் இருந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 2 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நபர் ஈரானில் இருந்து லெபனானுக்கு ஆயுதங்களை கடத்தி வரும் பிரிவின் தளபதியாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகி உள்ளன. ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இதற்காக ராணுவ தளவாடங்களை இஸ்ரேல் நகர்த்தி வருவதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் 5 கண்கள் எனப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உளவு கூட்டமைப்பிடம் பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணம் டெலிகிராம் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரகசிய ஆவணம் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: Air StrikeSyria.Iran missile attackRussia iranIsraelLebanonHamasgaza
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

Next Post

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!

Related News

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies