சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
குன்றத்தூர் சாலை, தாம்பரம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிந்தபடி உள்ளன. இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் நிகழ்வதாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே அசம்பாவிதங்கள் நேரிடுவதற்கு முன்பு காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.