தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே மழைநீரில் மூழ்கி சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த காரணத்தால் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. தற்போது மழை குறைந்தும் தண்ணீர் வடியாமல் இருப்பதால் நெற்பயிர்கள் அழுக தொடங்கியுள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்த விவசாயிகள்,முளைத்த பயிருடன் விளைநிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பேச்சுவார்த்தை நடத்த வந்த வேளாண்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.