தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள 38 ஆயிரம் நியாய விலைக்கடைகளிலும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில், 499 ரூபாய் விலையில் 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் கோதுமையின் அளவு அக்டோபர் 1-ம் தேதி தேதி முதல் 8 ஆயிரம் டன்னிலிருந்து 17 ஆயிரத்து 100 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் புதிதாக தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.