கோவை அருகே கேஸ் நிரப்ப சென்ற வேன் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.
உக்கடம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் மற்றும் எரிவாயு பங்க் ஆகியவை ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வழியே சென்ற ஆம்னி வேன் ஒன்று கேஸ் நிரப்புவதற்காக சென்றுள்ளது.
அப்போது, வேனின் முன்பகுதியிலிருந்து புகை வந்ததால், பெட்ரோல் பங்க் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் வெளியேறியுள்ளார். அப்போது, கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்து வேன் முழுவதும் தீக்கிரையானது. தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.