சென்னை அப்போலோ மருத்துவமனையில் 500வது ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.
நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம் 30 முதல் 60 வயதுடைய நோயாளிகளுக்குக் அதிக அளவில் பயன் அளிக்கும் என தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் விரைந்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.