ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசு தயங்கவில்லை என, சட்டமன்ற உறுதிக்குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, அவர் ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் விரைவில் சந்தித்து பேசுவார் என தெரிவித்தார்.
மேலும் கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து பேசியதாக குறிப்பிட்ட வேல்முருகன், போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் தனது நிலைப்பாடு என கூறினார்.