கோவையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உள்ள வீட்டின் முதல் மாடியில் குமார் – சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கோவை பூ மார்கெட் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் வழக்கம்போல் உணவகத்திற்கு பணிக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டு தப்பியுள்ளனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.