சென்னை, வியாசர்பாடி பகுதியில் மாநகர பேருந்தும், ஆட்டோவும் மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
வள்ளலார் நகர் செல்லும் அரசு மாநகர பேருந்து எம்.கே.பி நகர் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பயணியுடன் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அஜித் மற்றும் ஆட்டோவில் இருந்த பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.