55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா குறித்து ஆலோசிக்க ஒரு ஆக்கபூர்வமான ஆய்வுக் கூட்டத்தை நடத்தியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதில் பிருதுல் குமார், வ்ருந்தா மனோகர் தேசாய் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, சர்வதேசப் பார்வையாளர்களுக்கு இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திரக் கண்காட்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.