வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டானா புயலாக உருமாறியது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
அது, மேற்கு நோக்கி நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில், தாழ்வு மண்டலம் தற்போது டானா புயலாக உருமாறியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பூரி மற்றம் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டானா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ள மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.