அதிக குதிரை சக்தி திறன்கொண்ட சீன இயந்திரங்களை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது என விசைப்படகு மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட தலைவர் ஜேசுராஜா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜேசுராஜா, சைனா இன்ஜின்கள் பொருத்தப்பட்ட 4 விசைப்படகுகளை தடை செய்ய வேண்மென கோரிக்கை விடுத்தார்.
மேலும், இதுதொடர்பாக வருகிற 25-ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.