சீன அச்சுறுத்தல் எதிரொலி! : அதி நவீன ஏவுகணைகள் வாங்கும் ஆஸ்திரேலியா!
Oct 26, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீன அச்சுறுத்தல் எதிரொலி! : அதி நவீன ஏவுகணைகள் வாங்கும் ஆஸ்திரேலியா!

Web Desk by Web Desk
Oct 23, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அச்சுறுத்தல் காரணமாக, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்ற சூழலில், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2022 ஆண்டு மே மாதத்தில் மத்திய-இடது தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஆஸ்திரேலியா தனது இராணுவ கட்டமைப்பை சீரமைத்து வருகிறது.

இந்திய-பசிபிக் பகுதியில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா தனது ராணுவ திறனை மேம்படுத்தி வருகிறது.

அந்த வகையில், உள்நாட்டில் ஏவுகணைகளை உருவாக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டது. சிட்னிக்கு அருகிலுள்ள கடற்படை மற்றும் வான்வழி கூட்டுத் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக மறுவடிவமைக்கப்படுகிறது. அதிநவீன ஏவுகணைகளை (JSM) உருவாக்கும் இந்த திட்டம் 570 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் அதிநவீன F-35A விமானங்களில் பொருத்தக்கூடிய JSM களை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிற்சாலை, ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் வரை தயாரிக்கும் என்றும், 2027ம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா செயற்படுத்த தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு 975 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை அமைப்புக்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை அமெரிக்கா சென்றிருந்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பாட் கான்ராய், 7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில்,ஸ்டாண்டர்ட் ஏவுகணைத் தொகுதி IIIC மற்றும் ஸ்டாண்டர்ட் ஏவுகணை-6 ஆகிய அமெரிக்க ஏவுகணைகளை ஆஸ்திரேலியா வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

1945ம் ஆண்டில் நடந்த பனிப்போருக்குப் பிறகு, தற்போது மிகப்பெரிய ஆயுதப் போட்டி உருவாகி இருப்பதால், ஆஸ்திரேலியாவும் தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைகள், நீண்ட தூர இலக்குகளைத் துல்லியமாக தாக்கியழிக்கும் திறன் கொண்டது என்றும் , கடல், தரை மற்றும் வான் ஆகிய 3 நிலைகளிலும், பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திறனை வழங்கும் என்றும் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

உண்மையில், தென் சீனக் கடலுக்கு அருகில் இருக்கும் வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ராணுவ தளங்களை மேம்படுத்தவே ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இணைந்துள்ளன.

Tags: Chinese threat echo! : Australia buys ultra-modern missiles!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் முழக்கம்!

Next Post

கனிம வள கடத்தலுக்கு துணைபோன 5 பேர் கைது!

Related News

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies