தூத்துக்குடி மாவட்டம் கோவளம் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் கைபற்றினர்.
கோவளம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள் உள்ளிட்டவை கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் சரக்கு வாகனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 86 மஞ்சள் மூட்டைகள், பீடி இலைகள், 31 கிலோ ஏலக்காய் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.