காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை துவக்கி வைத்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட 39 வகையான பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், வரும் நவம்பர் 6 -ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.