கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
பழுதடைந்த வீடுகளை சரி செய்யவும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, பொது கழிப்பிடம், நாடகமேடை, சமுதாயக்கூடம் மற்றும் தார்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் முழக்கமிட்டனர்.
அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் இனுங்கூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் போராட்டக்காரர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். உங்கள் கோரிக்கையை மனுவாக அளியுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் நகர்ந்து சென்றனர்.