மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள திட்டங்கள் பட்டியல் சமூக மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற எஸ்.சி., எஸ்.டி. பொருளாதார விடுதலை மாநாட்டில், சிறப்பு விருந்தினராக கைலாஷ்நாதன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளின் தொழில் வளர்ச்சி திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்படுகிறது என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு திட்டத்தால் தொழில்துறை மேம்பாடு, சுய வேலை வாய்ப்பு பெற முடியும் என்றும் கூறினார்.