அமலாக்கத்துறையினர் எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
Nov 12, 2025, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறையினர் எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

Web Desk by Web Desk
Oct 24, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனை 15 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், தற்போதையை ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

அந்த சமயத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்ட, வைத்திலிங்கம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தஞ்சை, சென்னை உட்பட வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். தஞ்சை தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கி 15 மணி நேரம் நடைபெற்ற சோதனை இரவு நிறைவு பெற்றது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்து கொண்டு வெளியே வந்த போது வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். மேலும், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து செய்தியாளர்கள் தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, செய்தியாளருக்கு பேட்டியளித்த வைத்திலிங்கம், அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு முறையாக பதில் அளித்துள்ளதாகவும், அவர்கள் எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட 6 இடங்களில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.

Tags: former minister VaidhilingamThanjoreVaidhilingam house raidenforcement agencies
ShareTweetSendShare
Previous Post

குடிமகன்களிடம் விடுதலை தாக்கத்தை விதைத்து சென்ற மருதுபாண்டிய சகோதரர்கள் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

கொடுங்கையூரில் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு – கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

Related News

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்!

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

அனுராக் காஷ்யப் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – அஜித் தோவல் தலைமையில் விசாரணை!

டிஜிபி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது!

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies