அமலாக்கத்துறையினர் எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
Mar 15, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறையினர் எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனை 15 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், தற்போதையை ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

அந்த சமயத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்ட, வைத்திலிங்கம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தஞ்சை, சென்னை உட்பட வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். தஞ்சை தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கி 15 மணி நேரம் நடைபெற்ற சோதனை இரவு நிறைவு பெற்றது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்து கொண்டு வெளியே வந்த போது வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். மேலும், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து செய்தியாளர்கள் தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, செய்தியாளருக்கு பேட்டியளித்த வைத்திலிங்கம், அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு முறையாக பதில் அளித்துள்ளதாகவும், அவர்கள் எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட 6 இடங்களில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.

Tags: former minister VaidhilingamThanjoreVaidhilingam house raidenforcement agencies
ShareTweetSendShare
Previous Post

குடிமகன்களிடம் விடுதலை தாக்கத்தை விதைத்து சென்ற மருதுபாண்டிய சகோதரர்கள் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

கொடுங்கையூரில் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு – கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies