திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போலீசாரை காட்டெருமை விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தெரசா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் சென்றார்.
இந்நிலையில், ஆளுநரின் பாதுகாப்பிற்கு அங்கு நின்றுகொண்டிருந்த காவல்துறையினரை காட்டெருமை விரட்டியது. காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.