ராமநாதபுரத்தில் தொடர் மழை காரணமாக 4 ஆயிரத்து 500 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1.2 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டு வந்தனர். நெல் பருவம் 3வது வாரத்தை நோக்கி சென்ற நிலையில், கடந்த வாரம் பெய்த கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.
இதன் காரணமாக சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.