ஒடிசாவில் ஆக்ரோஷத்துடன் கரையை கடந்த டானா புயல் காரணமாக, ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா – மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. அதிகாலை 1.30 மணி முதல் 3:30 மணி வரை புயல் கரையை கடந்த போது, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
இதனால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து முடங்கியுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டானா புயல் கரையை கடந்த நிலையில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.