நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை அடுத்த திருவேற்காடு கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.
அப்போது, 162 ஏக்கரில் இருந்த கோலடி ஏரி தற்போது 112 ஏக்கராக சுருங்கிவிட்டது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும், அவை அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.