மதுரை செல்லூரில், பந்தல்குடி கால்வாய் பாலத்தில் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகர் பகுதியில் பந்தல்குடி கால்வாய் நடுவே அமைந்துள்ள பாலத்தில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.