Gen Z என்னும் இளைய தலைமுறையினர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் புதிய சக்தியாக மாறி வருகிறார்கள். நாட்டின் நுகர்வோர் நிலப்பரப்பை மாற்றியமைக்கும் இந்த Gen Z தலைமுறையினருக்கு ஏற்ப, வணிக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் Gen Z மக்கள்தொகை, சுமார் 37.7 கோடியாகும். Gen Z தான் நாட்டின் மொத்த நுகர்வில் 43 சதவீதமாகும்.
இளையதலைமுறையினரின் குறிப்பிடத்தக்க வாங்கும் சக்தி மற்றும் செலவின சக்தியை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், பாஸ்டன் கன்சல்டிங் நிறுவனமும் Snap Inc சுமார் 800 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்திய நுகர்வோர் சந்தையில் கிட்டத்தட்ட 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நேரடி கொள்முதல் இளம்தலைமுறையினரால் மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
2030ம் ஆண்டில், சுமார் 36 சதவீத பணியாளர்கள் இளம்தலைமுறையினராக இருப்பார்கள் என்றும், சந்தையில் 730 பில். நிறுவனமும் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நேரடி செலவு செய்வார்கள் என்றும், கூறியுள்ள அந்த அறிக்கை, Gen Z இளைஞர்கள் தாக்கத்தால் மொத்தம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்றும் கணித்துள்ளது.
இளம் தலைமுறை மக்கள் தொகை இந்திய பொருளாதார ஆதிக்கத்தில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. எனவே,முக்கிய பிராண்டுகள் தங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
எடுத்துக் காட்டாக, அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள், Gen Z இளைஞர்களை கவர்வதற்காக,தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
“ஸ்வைப்-அப்” எனப்படும் Gen Z இன் ஆன்லைன் ஷாப்பிங் பழக்க வழக்கத்துக்கு ஏற்ப இந்தியாவின் இ-காமர்ஸ் துறை தன்னை மாற்றிக் கொள்கிறது.
அமேசான் ஃபேஷன் ஒரு சிறப்பு நெக்ஸ்ட் ஜெனரல் ஸ்டோரை உருவாக்கியுள்ள நிலையில், ஃப்ளிப்கார்ட் ஆப்-இன்-ஆப் ஃபேஷன் தளமான ஸ்பாய்லை அறிமுகப்படுத்தியுள்ளது. Flipkart இன் ஃபேஷன் துணை நிறுவனமான Myntra Fwd ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Gen Z இன் விருப்பத் தேர்வுகள், அபிலாஷைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே தங்கள் தொழில்களை மறுவடிவமைப்பதோடு, Gen Z உடன் இணைந்து தங்களின் வணிக உத்தியை உருவாக்குவதாக, BoAt நிறுவன இணை நிறுவனர் அமன் குப்தா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மூன்று பேர்களில், ஒருவர் Gen Z இளைஞரே என்று அமேசான் இந்தியாவின் ஃபேஷன் மற்றும் பியூட்டி இயக்குனர் ஜெபாகான் கூறுகிறார்.
தங்கள் மதிப்புகளுடன் ஒத்து போக தவறும் பிராண்டுகளை Gen Z தலைமுறையினர் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள் என்பதால், அந்த பிராண்டுகளுக்கு மிக மோசமான வணிக ஆபத்து இருப்பதாகத் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த பண்டிகைக் காலத்தில், இளம்தலைமுறையினர், சராசரியாக குறைந்தது 25,000 ரூபாய் வரை செலவு செய்வார்கள் என்றும், அதனால், மொத்தமாக, வரும் மூன்று மாத செலவினங்களில் 47 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. எனவே, இளம்தலைமுறையினர் சந்தையை கைப்பற்ற பிரபல பிராண்டுகள் போட்டிக்கு தயாராகி வருகின்றன.
சொல்லப்போனால், இந்தியாவின் Gen Z மக்கள்தொகை தான், அடுத்த இருபது ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை அதிநவீனமாக வடிவமைக்க உள்ளது.