களைகட்டும் தீபாவளி : காற்று வாங்கும் தையல் கடைகள் - சிறப்பு கட்டுரை!
Jun 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களைகட்டும் தீபாவளி : காற்று வாங்கும் தையல் கடைகள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில் ஜவுளிக் கடைகள், பட்டாசு கடைகள் எனப் பல்வேறு கடைகளிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால், ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி அதிகரிப்பாலும், ஆன் லைனில் நடக்கும் ஆடை வியாபாரத்தாலும் தீபாவளி பண்டிகை கால சீசனில்கூட தையல்காரர்கள் பலர் வேலையின்றி தவிக்கின்றனர். இது பற்றிய செய்தி தொகுப்பை பார்ப்போம்…

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தையல் கடைகள் தயாராகி விடும். டெய்லர்கள் 24 மணி நேரமும் வேலை பார்க்க, தையல் கடைகளில் புத்தாடைகள் அணிவகுத்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. ரெடிமேடு ஆயத்த ஆடைகள் உற்பத்திகள் அதிகரித்து விட்டன.

சந்து பொந்துகளில் எல்லாம் ரெடி மேடு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகள் முளைத்துவிட்டன. ஆன்லைன் மூலமும் ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ளும் இந்தக் கால கட்டத்தில், தீபாவளி பண்டிகை சீசனிலும் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலுக்கு டெய்லர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால் பல தையல் கடைகள் காற்றாடிக் கொண்டிருக்கின்றன. தீபாவளி சீசனில் இரவு பகலாக தையல் கடைகள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இருக்கும் சில தையல் கடைகளும் பகல் நேரங்களில் மட்டுமே செயல்படுகின்றன

தையல் கட்டணத்திலேயே ரெடிமேடு ஆடைகளை வாங்க முடிவதால் பெரும்பாலோனோர் அவற்றை தேடியே செல்கின்றனர். பல கட்டண சலுகைகளை கொடுக்கும் ஆன்லைனிலும் ஆடைகளை வாங்கிக் கொள்வதால் தையல் கடைகள் வேலையின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறிப்பாக பல பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த டெய்லரிங் தொழில் இன்று அவர்களது வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது. நூல், கேன்வாஸ் உட்பட்ட தையல் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு , கடை வாடகை, ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவையும் தையல்காரர்களுக்கு பெரும் பாரமாய் இருக்கிறது.

அதற்கேற்ப தையலுக்கான கட்டணமும் நிர்ணயிக்க முடியாத நிலையில் பலர் அந்த தொழிலையே விட்டுவிட்டு பெயிண்டிங், கட்டிட தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் காலங்களில் டெய்லர் என்பதை கூகுளில் தேடினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. “கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள்” என்ற பாடல் டெய்லர்களின் வாழ்வில் வெறும் சொல்லாகவே இருப்பதும் வேதனையிலும் வேதனை…

Tags: tailors storydeepavaliDiwalitextile shopstailors
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் குழந்தைகள் கடத்தல் – மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!

Next Post

பொருளாதார வளர்ச்சியின் புதிய சக்தியாக மாறி வரும் இளைய தலைமுறை : போட்டி போடும் பெரு நிறுவனங்கள் – சிறப்பு கட்டுரை!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies