களைகட்டும் தீபாவளி : காற்று வாங்கும் தையல் கடைகள் - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களைகட்டும் தீபாவளி : காற்று வாங்கும் தையல் கடைகள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில் ஜவுளிக் கடைகள், பட்டாசு கடைகள் எனப் பல்வேறு கடைகளிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால், ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி அதிகரிப்பாலும், ஆன் லைனில் நடக்கும் ஆடை வியாபாரத்தாலும் தீபாவளி பண்டிகை கால சீசனில்கூட தையல்காரர்கள் பலர் வேலையின்றி தவிக்கின்றனர். இது பற்றிய செய்தி தொகுப்பை பார்ப்போம்…

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தையல் கடைகள் தயாராகி விடும். டெய்லர்கள் 24 மணி நேரமும் வேலை பார்க்க, தையல் கடைகளில் புத்தாடைகள் அணிவகுத்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. ரெடிமேடு ஆயத்த ஆடைகள் உற்பத்திகள் அதிகரித்து விட்டன.

சந்து பொந்துகளில் எல்லாம் ரெடி மேடு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகள் முளைத்துவிட்டன. ஆன்லைன் மூலமும் ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ளும் இந்தக் கால கட்டத்தில், தீபாவளி பண்டிகை சீசனிலும் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலுக்கு டெய்லர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால் பல தையல் கடைகள் காற்றாடிக் கொண்டிருக்கின்றன. தீபாவளி சீசனில் இரவு பகலாக தையல் கடைகள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இருக்கும் சில தையல் கடைகளும் பகல் நேரங்களில் மட்டுமே செயல்படுகின்றன

தையல் கட்டணத்திலேயே ரெடிமேடு ஆடைகளை வாங்க முடிவதால் பெரும்பாலோனோர் அவற்றை தேடியே செல்கின்றனர். பல கட்டண சலுகைகளை கொடுக்கும் ஆன்லைனிலும் ஆடைகளை வாங்கிக் கொள்வதால் தையல் கடைகள் வேலையின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறிப்பாக பல பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த டெய்லரிங் தொழில் இன்று அவர்களது வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது. நூல், கேன்வாஸ் உட்பட்ட தையல் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு , கடை வாடகை, ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவையும் தையல்காரர்களுக்கு பெரும் பாரமாய் இருக்கிறது.

அதற்கேற்ப தையலுக்கான கட்டணமும் நிர்ணயிக்க முடியாத நிலையில் பலர் அந்த தொழிலையே விட்டுவிட்டு பெயிண்டிங், கட்டிட தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் காலங்களில் டெய்லர் என்பதை கூகுளில் தேடினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. “கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள்” என்ற பாடல் டெய்லர்களின் வாழ்வில் வெறும் சொல்லாகவே இருப்பதும் வேதனையிலும் வேதனை…

Tags: tailors storydeepavaliDiwalitextile shopstailors
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகாவில் குழந்தைகள் கடத்தல் – மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!

Next Post

பொருளாதார வளர்ச்சியின் புதிய சக்தியாக மாறி வரும் இளைய தலைமுறை : போட்டி போடும் பெரு நிறுவனங்கள் – சிறப்பு கட்டுரை!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies