ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ராஜ ராஜேஸ்வரி கோயிலில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு 1008 திருவிளக்கு ஏற்றி கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். முன்னதாக பள்ளி சிறுமிகள் இணைந்து முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று கதாபாத்திரங்களை வில்லுப்பாட்டாக பாடி அவரை போற்றினர்.
அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முத்திராமலிங்க தேவரின் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.