ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினியின் குற்றச்சாட்டுக்கு ஈஷா யோகா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோகா மையம் குறித்து ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் யாமினி தன்னார்வலராக ஈஷா ஹோம் ஸ்கூலில் ஆசிரியராக பணிபுரிந்ததாகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அவர் பணிபுரிந்து வந்தார்.
ஆனால் பணியின் போது அவர் மீது குற்றச்சாட்டுகளை எழுந்ததால் அவர் பணியில் நீக்கப்பட்டார். அவர் கூறும் கூற்றுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் குழந்தைகள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை சமரசம் செய்யும் எந்தவொரு நடத்தைக்கும் கடுமையான சகிப்புத்தன்மையற்ற கொள்கையை நாங்கள் பராமரிக்கிறோம். அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து முழுமையான ஆய்வு செய்து பள்ளியின் பல்வேறு அம்சங்களைப் பாராட்டி கிளீன் சிட் வழங்கியுள்ளது. ஈஷா ஹோம் ஸ்கூல் யாமினி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.