வீடுகளில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சென்னையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவொற்றியூர் அரசு ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் 2000 கற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்
தீபாவளி திருநாள் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், வீடுகளில் விபத்துல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து திருவொற்றியூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் பற்குணன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல் முறை விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது மற்றும் முதல் உதவி அளிப்பது உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாட அறிவுரை வழங்கப்பட்டது.