தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.