தீபாவளி போனஸ் தொடர்பாக பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில துணைத் தலைவர் மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து பேசினர்.
அப்போது அனைத்து தமிழக தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்ததைப் போல தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை உடனடியாக திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.