உக்ரைன் எல்லையில் 3 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்களைக் குவிக்க ரஷ்ய அதிபர் புதின் திட்டமிடுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா போர் ஏறத்தாழ 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த நிலையில், தாக்குதலைத் தீவிரப்படுத்தும் முனைப்பில் தங்கள் நாட்டின் எல்லையில் வடகொரிய ராணுவ வீரர்களைக் குவிக்க ரஷ்ய அதிபர் புதின் திட்டமிடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் தலைமை தளபதி வாயிலாக இந்தத் தகவல் தனக்கு கிடைத்ததாக கூறிய அவர், ரஷ்யாவுக்கு எதிராக நட்பு நாடுகள் அணிதிரள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.