திருச்சி நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் வாகனத்தில் இருந்து 97 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தீபாவளியையொட்டி, பட்டாசுக்கடை, அரிசி ஆலை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தீயணைப்பு துறையினர் வற்புறுத்தி லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.