அல்பேனியாவில் வரும் 28-ஆம் தேதி தொடங்கும் உலக மல்யுத்த சாம்பின்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்பார்கள் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மல்யுத்த வீராங்கனைகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தாங்கள் உலக சாம்பின்ஷிப் போட்டியில் பங்கேற்க உதவுமாறு மன்சுக் மாண்டவியாவிடம் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக மல்யுத்த சாம்பின்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்று பதக்கம் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.