கடற்படையில் மிரட்டும் இந்தியா : 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ரெடி - சிறப்பு கட்டுரை!
Sep 5, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படையில் மிரட்டும் இந்தியா : 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ரெடி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பற்படையை மேம்படுத்தும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் நான்காவது பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை மத்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த அக்டோபர் 9ம் தேதி, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, இரண்டு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கியது. ஏற்கெனவே, INS அரிஹந்த் மற்றும் INS அரிகாட் ஆகிய இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மூன்றாவது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதாமன் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான INS அரிதாமன் அடுத்தாண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது INS அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலைத் தொடங்கி வைக்கும் போது, இத்தகைய பாதுகாப்பு முன்னேற்றங்கள், இந்தியாவின் அணுசக்தி முக்கோணத்தை மேலும் ஊக்குவிப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுவதாகவும் மத்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

INS அரிஹந்த் மற்றும் INSஅரிகாட் ஆகிய இரண்டு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே ஆழ்கடல் ரோந்துப் பணியில் உள்ளன.

இந்நிலையில், கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில், இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான SSBN கடலுக்குள் செலுத்தப்பட்டது.

இந்த புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் 75 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலுக்கு S-4 என்ற குறியீட்டுப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் அணுசக்தித் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சக்ராவுக்கு S-1 என்று பெயரிட்டதால், INS அரிஹந்த் S-2 என்றும் , INS அரிகாட் S-3 என்றும் பெயரிடப்பட்டது. எனவே, நான்காவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்கு S-4 என பெயர் சூட்டப் பட்டுள்ளது.

INS அரிஹந்த் 750 கிலோமீட்டர் வரை செல்லக் கூடிய கே-15 அணுசக்தி ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. இந்த S-4 நீர்மூழ்கிக் கப்பலானது INS அரிஹந்த்தை விட பெரியதாகும்.

இந்த புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் K-4 பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அவை 3,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியவை ஆகும். மேலும், செங்குத்து ஏவுதல் அமைப்புகளுடன் இந்த நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப் பட்டுள்ளது. K-4 பாலிஸ்டிக் ஏவுகணைகள், இந்தியாவின் கடலுக்கடியில் அணுசக்தித் தடுப்புக்கான முக்கியத் தளமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய-பசிபிக் பகுதிகளில், அதன் கடற்படை திறன்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இதுவரை, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே வைத்துள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றதோடு, முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: minister rajnath singhIndian Navy's submarine fleet.nuclear-powered ballistic missile submarinenuclear-powered attack submarines
Share
Tweet
SendShare
Previous Post

கரகர….மொறுமொறு…கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் – சிறப்பு கட்டுரை!

Next Post

ஈரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் – 20 ராணுவ தளங்கள் தரைமட்டம்!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies