கரகர....மொறுமொறு...கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் - சிறப்பு கட்டுரை!
Jun 6, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரகர….மொறுமொறு…கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. பாரம்பரிய சுவை கொண்ட செட்டிநாட்டு பலகாரங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான ரகசியம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்….

செட்டிநாடு என்பது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் 56 ஊர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஊர்களையும் உள்ளடக்கியது. அந்த செட்டிநாட்டின் உணவு வகைகளுக்கு அறிமுகம் தேவையில்லை. சமையல் கலைக்கு புகழ் பெற்ற செட்டிநாட்டு பலகாரங்கள், உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவை. வருடம் முழுவதும் தயாரிக்கப்படும் இவ்வகை செட்டிநாட்டு பலகாரங்கள் தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகமாக அனைவராலும் விரும்பி வாங்கிச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காரம், இனிப்பு என பல்வேறு பாரம்பரிய செட்டிநாட்டு பலகாரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன. லாபத்தை விட தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இன்று வரை இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு எப்போதும் கிராக்கி உண்டு என்கிறார் பலகாரங்கள் தயாரிக்கும் முத்துக் கருப்பி….

அனைத்து செட்டிநாட்டு பலகாரங்களும், இயந்திரங்கள் இல்லாமல் பாரம்பரிய முறையில், உரலில் மாவுகளை இடித்து, கைகளால் முறைப்படி சலித்து பக்குவத்துடன் தயாரிக்கப்படுகின்றன. செட்டிநாட்டு சுவைக்காக, பல இடங்களில் இன்றும் விறகு அடுப்புகளில் தான் பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், சுத்தமான செக்கு எண்ணெய்யில் தயாரிக்கப்படுவதால், உடலுக்கு எந்தக் கெடுதலும் வராது என பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

காரைக்குடியை சுற்றி வசிக்கும் பெண்கள், செட்டிநாட்டு பலகாரங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல பெண்களின் குடிசை தொழிலாகவே இது மாறியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்கள், தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூர், கேரளா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டின் பலகாரங்கள் அனுப்படுகின்றன.

கல்யாண முறுக்கு, 5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட தேன் குழல் முறுக்கு வகைகள், அதிரசம், மண ஓலம் , மாவு உருண்டை, சீடை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, காரா பூந்தி, மிக்சர் உள்ளிட்ட செட்டிநாடு பலகாரங்கள் மிகவும் பிரபலமானவை என்கிறார் வாடிக்கையாளர் மெய்யப்பன்.

கல்யாண சீர் முதல் வளைகாப்பு சீர், தீபாவளி சீர் என வீட்டு சுப நிகழ்ச்சிகளில். பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்குக் எப்போதும் தனி இடம் உண்டு. மேற்கத்திய பண்டங்களைச் சாப்பிடப் பழகி இருந்தாலும், விசேஷ தினங்களில், சுவையையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரக் கூடிய செட்டிநாடு பலகாரங்களை வாங்குவதில்தான் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags: KaraikudiChettinad sweetsChettinad Palakarasdeepavalisivagangaipudukottai
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் யானை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

Next Post

கடற்படையில் மிரட்டும் இந்தியா : 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ரெடி – சிறப்பு கட்டுரை!

Related News

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies