போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சருக்கு மிரட்டும் தொனியில் பேசியதாக கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக அவரை அழைத்துச் சென்றபோது, பின்வாசல் வழியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, தன்னை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக பத்திரிகையாளர் முன்பு மார்க்கண்டேயன் கூச்சலிட்டார்.
இதே குற்றச்சாட்டை எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகனும் முன்வைத்துள்ளார்.
















