முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவெகவினர் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பின் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுமதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அரசு தரப்பு மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட மாஜிஸ்திரேட், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய எம்எல்ஏ, மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தார். ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்…
















