கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரமாக போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக அவரை மருத்துவமைனையின் பின்வாசல் வழியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக பத்திரிகையாளர் முன்பு மார்க்கண்டேயன் கூச்சலிட்டார்.
அப்போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளளனர். மேலும், ஏடிஎஸ்பி தீபு பத்திரிகையாளர்களை நோக்கி என்ன செய்து விடுவார்கள்? நான் பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டியது சர்ச்சையை எழுந்துள்ளது.
















