சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு மையத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
சேத்துப்பட்டில் ஆய்வுக்காக முதலமைச்சர் வருவதை அறிந்து சாலையின் இருபுறங்களிலும் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் அமர்ந்தபடியே மக்களைப் பார்த்து முதல்வர் கையசைத்தவாறு சென்றார்.
அதனைத் தொடர்ந்து, ராமநாதன் சாலையில் அமைந்துள்ள இயற்கை எரிவாயு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு எவ்வாறு இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். முன்னதாக நுழைவாயிலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்களை பார்த்து பதிலுக்கு முதல்வர் ஜோசப் விஜய் கையசைத்தார்.
முன்னதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகையையொட்டி, அங்கிருந்த சேதமடைந்த சுற்றுச்சுவரை அதிகாரிகள் திரையிட்டு மறைத்திருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், சேதத்தை சரிசெய்வதற்கு மாறாக குறைகளை மறைப்பதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
















