உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் ஒடெஸா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய எம்வி கோல்டன் லியோ என்ற சரக்கு கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட 17 மாலுமிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதில், இந்தியாவை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக கப்பல்களை குறிவைப்பதும் அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதும் கண்டனத்திற்குறியது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடல்சார் வணிக சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இதுபோன்ற தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
















