ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொசுக்களால் பரவும் டெங்கு நோய், மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. டெங்குவுக்கு இதுவரை எந்த தடுப்பூசியும் இல்லாததால் ஆண்டுதோறும் உயிரிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜப்பானில் செயல்படும் தகேடா என்ற நிறுவனம், கியூடெங்கா என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசி 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு செலுத்தப்படும். இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற முதல் தடுப்பூசி என்ற பெருமை கியூடெங்காவுக்கு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் தடுப்பூசி சோதனையில் கிடைத்த முடிவுகளை அடிப்படையாக வைத்து இந்தியாவில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
















