தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு வாரத்தில் 282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 341.5 கிலோ கஞ்சா, பல்வேறு செயற்கை போதைப்பொருட்கள் மற்றும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பாக 604 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 டன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
















