தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவில்பட்டியில் அமைந்துள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற தேரோட்டத்தில் கோயில் உறுப்பினர்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.