சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு மற்றும் ரோட்டரி சார்பில் 15வது ஆண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை பத்மஸ்ரீ ஜோஷ்னா சின்னப்பா தொடங்கி வைத்தார்.
“ஒரு நடை ஒரு நம்பிக்கை” என்ற பெயரில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில், புற்றுநோயில் இருந்து உயிர் பிழைத்தவர்கள், மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.